விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தெரிவித்த திமுக கூட்டணியினர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முழுஅடைப்பு போராட்டத்தையடுத்து மாவட்ட தலைநகரங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 400 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது, தலைநகர் சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். டெல்டா மாவட்டங்களில் பெருவாரியான மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது